வவுனியா நகரசபை பொது மலசலகூடத்திலிருந்து வெளியேரும் தூர்நாற்றம் : வர்த்தகர்கள் அசௌகரியம்!!

573

வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு அருகே காணப்படும் நகரசபை பொது மலசலகூடத்திலிருந்து தூர்நாற்றம் வீசுவதினால் பழைய பேரூந்து நிலைய கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் வியாபாரம் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

சலம் கழிப்பதற்கு ரூபா 10, மலம் கழிப்பதற்கு ரூபா 20 கட்டணம் அறவிடப்படுகின்ற போதிலும் மலசல கூடத்தினை சீரான முறையில் பராமரிப்பதில்லை எனவும் உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் தலையிட்டு தீர்வினை பெற்றுத்தருமாறு வர்த்தகர்கள் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.