வவுனியாவில் பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக வர்த்தகப் பிரிவு மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!!

1362

நெகிழ்ச்சியான செயல்

பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக வவுனியா வடக்கு , தெற்கு பிரிவுக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளிலும் கல்வி கற்க க.பொ.த உயர்தர வர்த்தக பிரிவு (2018ம் ஆண்டு) மாணவர்கள் அவர்களுக்கு கல்வி கற்பித்த வர்த்தக பிரிவு ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு 2018ம் ஆண்டு க.பொ.த உயர்தர வர்த்தக பிரிவு மாணவர்களின் ஏற்பாட்டில் வவுனியா இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள நெல்லி ஸ்டார் மண்டபத்தில் நேற்றையதினம் நடைபெற்றது.

வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமாக இந் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக வவுனியா தெற்கு வலய வர்த்தக பிரிவிற்கான ஆசிரிய ஆலோசகர் திருமதி சுபாஜினி நிரூபன் கலந்து சிறப்பித்திருந்ததுடன் சிரேஸ்ட ஆசிரியர்கள் உரை, ஆசிரியர்களின் உரை, சுவாரஸ்யமான பல்வேறு நிகழ்வுகள் என பல இடம்பெற்றன.

நிகழ்வின் இறுதியில் தங்களுக்கு கற்பித்த வவுனியா தெற்கு, வடக்கு வலயத்திற்குட்பட்ட வர்த்தக பிரிவு ஆசிரியர்களுக்கான நினைவுப்பரிசும் மாணவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.