வவுனியாவில் திருவள்ளுவர் நினைவுதினம்!!

1796

வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்டத்திலுள்ள திருவள்ளுவர் நினைவுத் தூபியில் இன்று குருபூஜை தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் உப நகரபிதா சு.குமாரசாமி தலைமையில் இடம்பெற்ற திருவள்ளுவர் நினைவு தினத்தில் அன்னாரின் நினைவுச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து திருவள்ளுவரின் நினைவுப் பேருரையை தமிழ் மணி அகளங்கனும், தமிழரருவி சிவகுமாரும் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் திருவள்ளுவர் நினைவுத்தூபியின் பராமரிப்பாளர் ஆர்.பிரேமச்சந்திரன், வவுனியா நகரசபை உறுப்பினர்கள், நகரசபை செயலாளர் ஆர். தயாபரன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ். ஸ்ரீனிவாசன் எனப்பலரும் கலந்துகொண்டனர்.