நீதிமன்றம் கொடுத்த தண்டனை
வவுனியாவில் மதுபோதை, வாகன வரி அனுமதிப்பத்திரம், சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் ஒருவருக்கு நேற்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் 15500 ரூபா தண்டம் அறவிடப்பட்டுள்ளது.
வவுனியா வீதிப் போக்குவரத்துப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ள மோட்டார் சைக்கிளின் சாரதி மதுபோதை, வாகன வரி அனுமதிப்பத்திரம், சாரதி அனுமதிப்பத்திரம்,
புகைச்சிட்டை என்பன தம்வசம் வைத்திருக்காமல் மோட்டார் சைக்கிளினை செலுத்திய குற்றத்திற்காக நேற்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய பொலிசார் குற்றச்சாட்டினை மன்றில் ஏற்றுக்கொண்ட நபருக்கு 15500 ரூபா நீதிமன்றத்தால் தண்டம் அறவிடப்பட்டுள்ளது.







