வவுனியா நகரசபையின் அசமந்தபோக்கு : வர்த்தகர்கள் சிரமம்!!

1129

வர்த்தகர்கள் சிரமம்

வவுனியா நகரசபையின் அசமந்த போக்கினால் சூசைப்பிள்ளையார்குள வீதியில் அமைந்துள்ள வர்த்தகர்கள் தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

தமது வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக அமைந்துள்ள கால்வாயினால் செல்லும் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டுள்ளதுடன் அதிலிருந்து டெங்கு நுளம்புகள் பெருகுவதுடன் மாலை நேரங்களில் அப்பகுதியில் நுளம்பு தொல்லைகள் அதிகரித்து காணப்படுகின்றன.

இதன் காரணமாக தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் இவ்விடயம் தொடர்பாக பல தடவைகள் வவுனியா நகரசபை உபதலைவர் , உறுப்பினர்களிடம் தெரிவித்திருந்த போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லையெனவும்,

வர்த்தக நிலையத்தினுள் டெங்கு பரவும் விதமாக சிறு பொருட்கள் இருந்தவுடன் தண்டப்பணம் விதிக்கும் சுகாதாரப் பிரிவினர் ஏன் இவ்விடயத்தில் மௌனமாக இருக்கின்றனர் என வர்த்தகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபை உப நகரபிதா எஸ்.குமாரசாமி அவர்களுடன் கொண்டு வினவிய போது, குறித்த விடயம் தொடர்பாக எனக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. ஒர் இரு தினங்களில் தீர்வினை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்தார்.