வவுனியா நகரசபையின் அமர்வு
வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வு நாளை நடைபெறவுள்ள ஹர்த்தால் காரணமாக செவ்வாய்கிழமைக்கு பிற்போடப்பட்டுள்ளதாக சபையின் தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்தார்
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
திங்கட்கிழமை சபையின் மாதாந்த அமர்வு நடைபெறவிருந்தநிலையில், காணாமல் ஆக்கபட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கபடுவதுடன், வடமாகாணம் தழுவிய ரீதியில் ஹர்த்தால் ஒன்றை அனுஸ்டிப்பதற்கும் தமிழ் மக்கள் தயாராகிவருகின்றனர்.
இந்நிலையில் நீண்டகாலமாக தமிழ்மக்களின் முக்கிய பிரச்சினையாக காணப்படும் காணாமல்ஆக்கபட்டவர்களின் நிலை தெரியபடுத்தபடவேண்டும் என்பதுடன் அவர்களின் போராட்டங்கள் நியாயமானதுமே.
அவர்களது நியாயமான கோரிக்கைக்கு அமைவாக வவுனியா நகரசபை அவர்களுக்கு ஆதரவாக இருப்பதுடன் நாளை நடைபெறவிருந்த மாதாந்த அமர்வை இடைநிறுத்தி நாளை மறுதினம்
செவ்வாய்கிழமை குறித்த அமர்வை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.
அத்துடன் கிளிநொச்சியில் நடைபெறும் போராட்டத்தில் நாம் கலந்துகொள்ளவுள்ளதுடன் ஏனைய உறுப்பினர்களும் கலந்துகொண்டு போராட்டத்திற்கு வலுசேர்குமாறு அவர்’மேலும் தெரிவித்தார்.







