வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலை : அறிக்கை கோருகிறது ஆளுனர் அலுவலகம்!!

566

வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலை

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக, பொதுமக்கள் குடிமனைக்கருகில் மதுபானசாலை இயங்குவது தொடர்பாக தமக்கு அறிக்கை சமர்பிக்குமாறு வடமாகாண ஆளுநரின் உதவிச் செயலாளர் எக்ஸ்.செல்வநாயகத்தால் யாழ். மாவட்ட உதவி மதுவரி ஆணையாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில்தெரிவிக்கபட்டுள்ளதாவது,

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான நிலையமானது பொதுமக்களிற்கு இடையூறாக காணப்படுவதாக தெரிவித்தும் அதனை அகற்றுமாறு கோரியும் குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்கத்தினால் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தபட்டிருந்தது.

எனவே இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்து பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்து அறிக்கை சமர்பிக்குமாறு ஆளுநரால் எனக்கு பணிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக இவ்விடயம் தொடர்பாக பொருத்தமான நடவடிக்கையினை எடுப்பதற்காக மதுவரி திணைக்களம் ஒரு வாரகாலத்திற்குள் அறிக்கை ஒன்றினை தமக்கு அனுப்பி வைக்குமாறு குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தின் பிரதி ஒன்று வவுனியா குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் கபில்நாத்திற்கும் அனுப்பிவைக்கபட்டுள்ளமை குறிப்பிடதக்கது.