கல்வியால் எழுவோம் செயற்றிட்டம்
வவுனியா நகர சபையின் உறுப்பினரும் ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபனால் தொடர்ச்சியான கல்வி ஊக்குவிப்பு செயற்றிட்டமாக நடைமுறைப்படுத்தும் “கல்வியால் எழுவோம்” செயற்றிட்டத்தின் தொடர்ச்சியாக குருமன்காடு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் முன்பள்ளி சிறார்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (26.02.2019) காலை 8.30 மணிக்கு நடைபெற்றது.
இவ் நிகழ்வில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகரன் கேசவன், சமூக ஆர்வலர் சந்திரேஸ்வரன் ரவி ஆகியோர் கலந்து கொண்டதுடன்.
இவ் கற்றல் உபகரணங்களை புளொட் அமைப்பின் இளைஞரணி உறுப்பினரான வி.சஜீவ்நாத்தினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







