வவுனியாவில் வடக்கு மாகாண ஆளுனர் மக்கள் சந்திப்பு!!

559

வடமாகாண ஆளுனர் மக்கள் சந்திப்பு

வவுனியாவில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேஸ் ராகவன் விசேட மக்கள் சந்திப்பு ஒன்றை இன்று (27.02) வவுனியா நகரசபை மண்டபத்தில் மேற்கொண்டார்.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம். ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மக்கள் சந்திப்பானது காலை 10 மணிதொடக்கம் பிற்பகல் 2.00 மணிவரை நடைபெற்றிருந்தது.

இம் மக்கள் சந்திப்பில் வடக்கு மாகாண அமைச்சின் பிரதம செயலாளர் அ.பத்திநாதன், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர்,

மகளிர் விவகார அமைச்சின் செயலாளர், காணி ஆணையாளர், வடமாகாண வீதி பயணிகள் போக்குவரத்து, அதிகாரசபை, உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் வவுனியா உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஆகியோர் கலந்துகொண்டு மக்கள் குறைகளை கேட்டறிந்தனர்.