வவுனியா நகரசபை சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!!

690

பணிப்புறக்கணிப்பு போராட்டம்

வவுனியா நகரசபையின் அகில இலங்கை அரச பொது ஊழியர்கள் சங்கத்தின் சுகாதாரத் தொழிலாளர்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

நகரசபை பொது சுகாதாரப் பரிசோதகரின் அடக்குமுறைக்கு எதிராகவும் பக்கச்சார்பான முறையில் நடந்து கொள்வதாகவும் தெரிவித்து இன்று காலை நகரசபை சுகாதாரத் தொழிலாளர்கள், அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து நகரசபை தலைவருடன் கலந்துரையாடல் ஒன்றிற்கு அழைக்கப்பட்டு சாதகமான பதில் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. எனினும் தமது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரையில் நகரசபை பொது சுகாதாரப் பரிசோதகருக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று அகில இலங்கை அரச பொது ஊழியர்கள் சங்கத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இப் பணிப்புறக்கணிப்பு தொடர்பாக புதிய அரச பொது ஊழியர் சங்கத்தினர் கருத்து தெரிவிக்கையில், இந்த நடவடிக்கையினை பொது மக்களுக்கு இலகுவாகவும் கடமையாற்றுகின்ற தொழிலாளர்களுக்கும் இலகுவாக தான் இந்தவோரு நடவடிக்கையினை சுகாதார பரிசோதகர் முன்னெடுத்தது.

ஒரு வருடத்திற்கு மேலாக வவுனியா நகரசபையில் குப்பையேற்றும் இரு சக்கர தள்ளுவண்டி பாவனையின்றி காணப்படுகின்றது. அது தற்போது வெயிலும் மழையிலும் துருப்பிடித்து காணப்படுகின்றது. தள்ளுவண்டியினை பாவணைக்குட்படுத்துவது கிடையாது .

சுகாதார பரிசோதகர் தெரிவிக்கையில், ஒரு இருசக்கர குப்பையேற்றும் வண்டிக்கு இரு பெண், ஒரு ஆண் சுகாதார ஊழியர் கடமைக்குட்படுத்தப்பட்டு நகரில் இரண்டு ஒழுங்கை வழங்கப்பட்டு குறித்த ஒழுங்கையின் வாய்க்கால், புல்லுகள், குப்பைகளை சேகரிக்கவும் ஒரு நாள் முழுவதும் குறித்த இரு ஒழுங்கையும் தான் சுத்திகரிப்பு மேற்கொள்ள வேண்டும் .

வவுனியா நகரசபையில் 52 சுகாதார ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இரு ஒழுங்கைக்கு மூவர் படி பணியாற்றும் பட்சத்தில் நகரத்தின் குப்பைகளை அகற்றுவது இலகுவாக அமையும் என பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தமை தவறா? ஒரு சில சுகாதார ஊழியர்கள் மேற்கொள்ளும் பணிப்புறக்கணிப்பினை வண்மையாக கண்டிப்பதாக தெரிவித்தனர்.