முதல் முறையாக புதிய சேவை
வட மாகாணத்தில் முதல் முறையாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நோயாளர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவதற்கான நோயாளர் காவு வண்டி சேவையினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமாரன் தலைமையில் இன்று (01.03.2019) மதியம் 11.30 மணியளவில் இடம்பெற்றது.
சிவில் தர்மவர்த்தன பவுன்டேசன் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட நோயாளர் காவுவண்டி சேவையானது முற்றிலும் இலவசமாக இடம்பெறவுள்ளது.
யுத்தத்தின் பின்னர் வடக்கில் பல மக்கள் வறுமையில் உள்ளர். வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றதன் பின்னர் வீடு திரும்புவதற்கு பணமின்மை மற்றும் நடந்து அல்லது பேரூந்து மூலம் செல்வதற்கு இயலாமை போன்ற நோயாளர்களை அவர்களது இல்லத்திற்கு இவ் நோயாளர் காவுவண்டியின் மூலம் எடுத்துச் செல்லப்படுவார்கள்.
இச் சேவையினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் சிவில் தர்மவர்த்தன பவுன்டேசன் நிறுவனத்தின் செயலாளர் லேஸ்லி தர்மவர்த்தன, தலைவர் பேசி தர்மவர்த்தன, பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மு.மகேந்திரன், வைத்தியர்கள், வைத்தியசாலையின் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


















