வவுனியாவில் சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட 5பேர் பணத்துடன் கைது!!

665

சூதாட்டத்தில் ஈடுபட்ட 5பேர் கைது

வவுனியா தட்சணாங்குளம் பகுதியிலுள்ள கள்ளுத்தவறணை ஒன்றில் சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் ஒரு தொகைப் பணத்துடன் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

பண்டாரிக்குளம் குளக்கட்டு வீதியூடாக தட்சணாங்குளம் செல்லும் குளக்கட்டிலுள்ள கள்ளுத்தவறணையில் நீண்டகாலமாக சட்டவிரோதமாக முறையில் பணம் வைத்து சூது விளையாட்டு இடம்பெற்று வருவதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேயவிக்கிம தலைமையில் கீழ் செயற்படும் புலனாய்வுப்பிரிவினருக்குக்கிடைத்த தகவல் அடிப்படையில்,

நேற்று பிற்பகல் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயப்படும் போதை ஒழிப்புப் பிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது கள்ளுத்தவறணையில் சட்டவிரோதமான சூது விளையாட்டில் ஈடுபட்ட 5பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து சூது விளையாட்டிற்குப் பயன்படுத்திய ஒரு தொகைப் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் இன்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.