வவுனியா ஆசிகுளம் பாடசாலைக்கு முன்பாக வேகத்தடை ஏற்படுத்தித்தருமாறு கோரிக்கை!!

828

வேகத்தடை

வவுனியா ஆசிகுளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலைக்கு முன்பாக உள்ள வீதியில் பேருந்து உட்பட வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதனால் பாடசாலை மாணவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே அவ்வீதியில் வேகத்தடை ஒன்றினை ஏற்படுத்தித்தருமாறு அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.

சிதம்பரபுரம் மயிலங்குளம் ஊடாக வவுனியா செல்லும் பேருந்துகள் உட்பட வாகனங்கள் அவ்வீதியால் அதிக வேகமாகச் செல்கின்றன. இதனால் ஆசிகுளம் பகுதியிலுள்ள அரசினர் தமிழக்கலவன் பாடசாலைக்கு மாணவர்கள் சென்றுவருவதில் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதுடன் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

பாடசாலை நேரத்திலும் இவ்வீதியூடாகச் செல்லும் பேருந்துகள் அதிக வேகத்துடன் செல்கின்றன. இது குறித்து பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டும் எவ்விதமான நடவடிக்கையும் இன்று வரை மேற்கொள்ளப்படவில்லை. எனவே பாடசாலைக்கு முன்பாக உள்ள வீதியில் வாகனத்தின் வேகத்தை கைக்கட்டுப்படுத்தியும் மாணவர்களின் பாதுகாப்புக்கருதியும் வேகத்தடை ஒன்றினை ஏற்படுத்தித்தருமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.