வவுனியாவிலுள்ள சதொச விற்பனை நிலையத்திற்கு அமைச்சர் ரிஷாட் திடீர் விஜயம்!!

1333

அமைச்சர் ரிஷாட் திடீர் விஜயம்

வவுனியா நெளுக்குளம் சந்தியிலுள்ள சதொச விற்பனை நிலையத்திற்கு இன்று(06.03) காலை கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதீன் திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

கைத்தொழில் வாணிபத்துறை மத்திய அமைச்சர் சதொச விற்பனை நிலையத்திற்கு முன்னறிவித்தலின்றி சென்று அங்குள்ள விற்பனை பொருட்களின் தரம், பாவனையாளர்களுக்கு சரியான முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறித்து அவதானம் செலுத்தியுள்ளதுடன் சதொச விற்பனை நிலையத்தின் தூய்மை தொடர்பாகவும் அவதானம் செலுத்தியுள்ளார்.

இன்று காலை பல்வேறு நிகழ்வுகளுக்காக மன்னார் நகருக்குச் சென்ற அமைச்சர் நெளுக்குளம் பகுதியிலுள்ள சதொச விற்பனை நிலையத்திற்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்துள்ளார். அமைச்சருடன் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹமட், நகரசபை உறுப்பினர்களான அப்துல் பாரி, லரீப் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.