வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் தீ விபத்து!!

1655

விபுலானந்தா கல்லூரியில் தீ விபத்து

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் இன்று (09.03) மதியம் 12.30 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்து சுமார் ஒரு மணிநேர போராட்டத்தின் பின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

விபுலானந்தா கல்லூரியின் கணிணி அறையில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. அதனையடுத்து பாடசாலை சமூகத்தினர் பண்டாரிக்குளம் பொலிஸார் மற்றும் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பண்டாரிக்குளம் பொலிஸார் பாடசாலை மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினார்கள்.

அதன் பின் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் சுமார் ஒரு மணிநேர போராட்டத்தின் தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கணிணி அறையில் ஏற்பட்ட மின்னொழுக்கினால் தீவிபத்து நேர்ந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத் தீ விபத்து காரணமாக கணிணி அறையில் இருந்த கணிணிகள், கதிரைகள் என்பன முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.