வவுனியாவில் 8 வயது மகனை கடத்தி தாய் தீட்டிய திட்டம் அம்பலம்!!

588

தாய் தீட்டிய திட்டம் அம்பலம்

வவுனியா நெடுங்கேணி பெரியமேடு பகுதியில் சிறுவனொருவரை கடத்தி வெளிநாட்டில் பணிபுரியும் அவரின் தந்தையிடம் கப்பம் கோரிய சிறுவனின் தாய் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுவனின் தாய் , தாயின் சகோதரர் மற்றும் தந்தையின் சகோதரர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வௌிநாட்டில் வசிக்கும் நபரிடம் 35 இலட்சம் ரூபாய் இவ்வாறு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 6ம் திகதி இரவு 8 மணியளவில் குழந்தையை இனந்தெரியாத சிலர் கடத்திச் சென்று 35 இலட்சம் ரூபாய் கோருவதாக கடந்த 7ம் திகதி சிறுவனின் தாயாரால் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த தொலைப்பேசி அழைப்பு தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் சிறுவன் ஓமந்தை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறுவனின் தாய் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பெற்றிருந்த கடன்களை செலுத்துவதற்காக இந்த கடத்தல் திட்டத்தை செயற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.