வவுனியாவில் ஹெரோயினுடன் 55 வயது நபர் கைது!!

620

ஹெரோயினுடன் கைது

வவுனியா ஓமந்தையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஓமந்தை பொலிசார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவித்த பொலிசார்,

இன்று மாலை ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் கடமையில் இருந்த பொலிசார் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரும்பு வியாபாரத்தில் ஈடுபடும் நபர் ஒருவரை வழிமறித்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது அவரிடமிருந்து 45 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டனர். குறித்த 55 வயதான நபர் கைதுசெய்யபட்டதுடன், அவர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் தமது கட்டுபாட்டில் எடுத்துசென்றுள்ளதாகவும், கைதுசெய்யபட்ட நபரை நாளைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.