வவுனியா செட்டிகுளம் வேப்பன்குளம் மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு நிரந்தர தீர்வு!!

1076

 

1994ம் ஆண்டிற்கு பின் நேரியகுளம் மற்றும் வேப்பன்குளம் மக்கள் நீண்ட காலமாக நிரந்தர வீடு இன்றி பல கவனயீர்ப்பு போராட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர்.

இவர்களின் நீண்டகால போராட்டத்திற்கு தீர்வாக நேற்று முன்தினம் (09.03.2019) காலை 9 மணியளவில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினூடாக விட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இரு கிராமங்களிலும் மிக சிறப்பாக நடைபெற்றது

இந் நிகழ்விற்கு செட்டிகுளம் பிரதேச செயலாளர், பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள், வீடமைப்பு அதிகாரசபை முகாமையாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் , முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான செ.மயூரன், ம.தியாகராஜா, பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பயனாளிகள், அரச உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.