வவுனியாவில் மின்சார பாவனையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

1065

முக்கிய அறிவித்தல்

வவுனியா மற்றும் மன்னார் பிரதேச இலங்கை மின்சார சபையின் பிரதம மின் பொறியியலாளரால் நுகர்வோருக்கான அறிவுறுத்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

நுகர்வோரின் பாவனைக்குரிய மின் பட்டியில் தொகையை தாமதமின்றி செலுத்துமாறும், தொடர்ந்து மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின்மானி இலக்கங்கள் கிரமமாக பரிசீலிக்கப்பட்டு உரிய நேரத்தில் பணம் செலுத்தாதவர்களின் இணைப்புக்கள் துண்டிக்கப்படும் என்பதை தெரிவிப்பதோடு,

நுகர்வோர் இவ்விடயத்தில் விழிப்பாக இருந்து அசௌகரியங்களை குறைத்து கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை கேட்டுக்கொண்டுள்ளது. மற்றும் மின்சார சபையால் நுகர்வோரால் அவதானிக்கப்பட வேண்டிய விடயங்களாக தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

ஓரவத்தை மின்சாரம் மூவத்தையாக மாற்றப்பட்டுள்ளது, ஆனால் மின்பட்டியல் மாற்றப்படவில்லை, மின்மானி பழுதடைந்துள்ள போதிலும் தொடர்ந்து இயங்குகின்றது, மின்மானி தவறான இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது, மின் மானி மழைக்கு நனைகிறது, மின்மானியின் கண்ணாடி அழுக்கடைந்துள்ளது அல்லது மானி சூடேறுகிறது,

மானி உருகி உடைந்துள்ளது அல்லது எரிந்துள்ளது, கம்பிகள் பழுதடைந்துள்ளது, மின் மானியானது கட்டடத்தினுள் பொருத்தப்பட்டுள்ளது, மின் மானியின் பலகை கழன்றுள்ளது அல்லது உக்கியுள்ளது,

மின்மானியானது தவறாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது போன்ற விடயங்கள் அவதானிக்கப்பட்டு மின்மானி வாசிப்பாளரால் வாய்மொழி மூலமாக அறிவிக்கப்பட்டிருப்பின் அதை கருத்தில் கொண்டு நுகர்வோர் மின்சார சபையின் காரியாலயத்திற்கு மின்சாரப் பட்டியலுடன் சென்று குறைகளை நிவர்த்தி செய்யுமாறு கோரப்படுவதுடன்,

அவ்வாறு செய்யாதவிடத்து நுகர்வோரின் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்படும் என வவுனியாவின் பிரதம மின் பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.