வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் சிறுவர் விழிப்புணர்வு நிகழ்வு!!

606

 

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் இன்று (12.03) காலை பாடசாலை மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி எஸ்.ஜெபநாயகி தலைமையில் மாணவர்களுக்கான சிறுவர் துஷ்பிரயோக விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.

இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் சிறுவர்கள் துஷ்பிரயோகம் விழிப்புணர்வு நிகழ்வினை வன்னிப்பிராராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகம் மேற்கொண்டது.

தற்போது சிறுவர்கள் எதிர்நோக்கும் போதைப்பாவனை, துஷ்பிரயோகம் தொடர்பாக பொலிசாரால் மாணவர்களுக்கு ஒளிப்படக்காட்சி காண்பிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது.

அத்துடன் விளையாட்டுத்துறையில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சான்றிதழ்கள், கேடயங்களையும் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபயவிக்கிரம, வடமாகாண கிறிஸ்தவ ஒன்றியத்தின் தலைவரும், கிறிஸ்தவ மத விவகாரங்களுக்கான செயலாளருமான அருட்கலாநிதி எஸ்.சந்திரகுமார், போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரி, தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சிறுவர் பெண்கள் பொறுப்பதிகாரி, பொலிசார், ஆசிரியர்கள், மாணவர்கள் எனபப்பலரும் கலந்துகொண்டனர்.