வவுனியாவில் ஹெரோயினுடன் இருவர் கைது!!

1071

இருவர் கைது

வவுனியாவில் ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த இருவரை கைதுசெய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று மதியம் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த வவுனியா பொலிஸ் நிலைய போதைதடுப்புப் பிரிவினர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த இருவரை சோதனைசெய்த போதே குறித்த போதைப் பொருளை மீட்டுள்ளனர்.

சம்பவத்தில் மாளிகாவத்தை, நுகேகொடை பகுதிகளை சேர்ந்த 40 வயதான இருவர் கைதுசெய்யபட்டுள்ளனர். அவர்களது கால்சட்டை பையில் இருந்து இரண்டு கிராம் ஹெரோயின் மீட்கபட்டதாக போலிசார் மேலும் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.