வவுனியாவில் மீட்க்கப்பட்ட விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள்? : காத்திருக்கும் அதிர்ச்சித் தகவல்!!

591

மீட்க்கப்பட்ட ஆயுதங்கள்

வவுனியா ஹொரவப்பொத்தானை வீதி மடுக்கந்தை குடாகச்சகொடி காட்டுப் பகுதியிலிருந்து பல ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயதங்களை விஷேட அதிரடிப்படையினர் நேற்று (16.03.2019) மாலை 4 மணியளவில் மீட்டெடுத்துள்ளனர்.

குடாகச்சகொடி காட்டுப்பகுதியில் மரக்கடத்தல், மண் அகழ்வுகளை தடுக்கும் நோக்கில் மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினர் நேற்று மாலை விஷேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது காட்டுப்பகுதியிலிருந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் ஆயதங்களை விஷேட அதிரடிப்படையினர் மீட்டேடுத்துள்ளனர்.

எம்.பி.என்.ஜி ரக துப்பாக்கி – 59 , மோட்டர் துப்பாக்கி – 1 , 356ரக துப்பாக்கி – 5 , எல்.எம்.ஜி – 1 , எச்.கே7 துப்பாக்கி – 2 , 60மில்லி மீற்றர் மோட்டார் – 1, 356 ரக மேகசின் – 4 ஆகியவற்றை மீட்டெடுத்த விஷேட அதிரடிப்படையினர் அவற்றை வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மீட்கப்பட்ட ஆயுதங்கள் விடுதலைப்புலிகளுடையதா என்ற கோணத்தில் விசாரணை இடம்பெற்று வருவதுடன் மீட்கப்பட்ட ஆயுதங்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.