வவுனியாவில் அமைக்கப்பட்ட நீர்த்தாங்கிக்கு தனி அரபி மொழியில் பெயர்ப் பலகை!!

385

அரபி மொழியில் பெயர்ப் பலகை

இராசேந்திரகுள கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஏழு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சோழர் பவர் நீர்த்தாங்கியுடன் கூடிய குழாய் கிணறு அமைத்து நேற்று (18.03.2019) காலை 9.30 மணியளவில் மக்கள் பாவனைக்காக வழங்கி வைக்கப்பட்டது.

முன்னாள் பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தானின் வேண்டுகோளுக்கினங்க ஐ.எஸ்.ஆர்.சி அமைப்பின் நிதி உதவியில் இக் குடிநீர் திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

சோழர் பவர் நீர்த்தாங்கி திரைநீக்கம் செய்யப்பட்ட பெயர்ப் பலகை அரபு மொழியில் மாத்திரம் காணப்படுவது தமிழ் மக்களிடையே அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், ஸ்ரீரேலோ கட்சியின் இளைஞர் அணி தலைவர் பரமேஸ்வரன் கார்த்தீபன் , கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.