வவுனியாவில் கவிச்சக்ரவர்த்தி கம்பரின் தினம் அனுஸ்டிப்பு!!

577

 

கவிச்சக்கரவர்த்தி கம்பர் கம்பராமாயணத்தை அரங்கேற்றிய நாளான இன்று கம்பரின் நினைவாக கொண்டு நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா சூசைப்பிள்ளையார்குளத்தில் அமைந்துள்ள கம்பரின் சிலைக்கருகில் இடம்பெற்ற இந் நிகழ்வினை வவுனியா நகரசபையும், தமிழ் மாமன்றமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

வவுனியா நகரசபையின் தலைவர் இ.கௌதமன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தமிழருவி த. சிவகுமாரன் மற்றும் தமிழ் மாமணி அகளங்கன் ஆகியோர் சிறப்புரையாற்றியிருந்ததுடன் நகரசபை உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள்,

நகரசபையின் செயலாளர் இ.தயாபரன், உபதலைவர் சு.குமாரசுவாமி தமிழ் மாமன்றத்தின் உறுப்பினர்கள், வைத்தியர்கள் செ.மதுரகன், கிருபானந்தகுமார் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.