பனிமூட்டம்
வவுனியாவில் கடந்த சில நாட்களாக காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடும் பனிமூட்டம் காணப்படுவதால் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
காலை எட்டு மணியை கடந்தும் வவுனியாவில் உள்ள பிரதேசங்களில் பனிமூட்டம் நிறைந்து காணப்படுகின்றது.
அத்துடன் கடுமையான பனிப் பொழிவு காரணமாக வீதிகளில் வாகனம் செல்லும் வாகன சாரதிகள்பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கியுள்ளனர். மக்களது நடமாட்டமும் வீதிகளில் காலைவேளையில் குறைவாகவே காணப்படுகின்றது.









