வவுனியாவில் ஏழை மாணவர்களின் துயர்துடைக்க முன்வந்துள்ள இளைஞர் பசுமைத்திட்டம்!!

619

இளைஞர் பசுமைத்திட்டம்

இளைஞர் பசுமைத்திட்டம் ஊடாக வவுனியா மாவட்டத்தில் உள்ள 2018ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் உயர்தரம் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான,

கல்வி கற்கும் மாணவர்களுக்கான மாதாந்த கொடுப்பணவு வழங்கும் செயற்றிட்டம் வவுனியா புகையிரத நிலையில் வீதியில் அமைந்துள்ள இளைஞர் பசுமைத்திட்டம் ( YOUTH GREEN PLAN) காரியாலய நிறுவனத்தில் நேற்று காலை 9.30 மணியளவில் நிறுவனத்தின் பணிப்பாளர் நபீஸ் அபூதாஹீர் தலமையில் இடம்பெற்றது.

வவுனியா மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கு அதிகமான மாணவர்கள் இச் செயற்றிட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

எதிர்காலத்தில் இளைஞர் பசுமை திட்டம் ஊடாக பாடசாலை ஊடாக மாணவர்களுக்கு இலவச கருத்தரங்கு , புலமைப்பரிசில் திட்டங்கள் போன்ற பல செயற்றிட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.