வவுனியா புதுக்குளம் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கி வைப்பு!!

880

மாணவர்களுக்கு சீருடைகள்

வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலை அதிபர் திருமதி எஸ்.கமலாம்பிகை தலைமையில் இன்று (26.03) சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில பிரதம அதிதிகளாக வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் றொசான் பெனாண்டோ, வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.கணேசநாதன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கி வைத்தனர்.

பொன்னையா நவமணி அம்மையாரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாடசாலையின் 160 ஆரம்பபிரிவு மாணவர்களுக்கு பாடசாலை சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி மகிந்த வில்வ ஆராட்சி, ஓமந்தை போட்டக்கல்வி அதிகாரி எஸ்.சசிகுமார் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.