வவுனியாவில் கசிப்புடன் ஒருவர் கைது!!

639

கசிப்புடன் ஒருவர் கைது

வவுனியா புதியபேருந்து நிலையத்தில் ஓரு போத்தல் சட்டவிரோத சாராயத்தினை (கசிப்பு) உடமையில் வைத்திருந்தகுற்றசாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா பிரதிபொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் விசேடபோதை ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

நேற்றயதினம் புதிய பேருந்துநிலைய பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் நபர் ஒருவரிடம் சோதனையில் ஈடுபட்டபோதே குறித்த சட்டவிரோத மதுபானம் மீட்கப்பட்டதுடன் அதனை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றசாட்டின் அடிப்படையில் பதுளை பகுதியை சேர்ந்தநபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபர் கிளிநொச்சி பகுதிக்கு திருமண வைபவம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்றுவிட்டு மீண்டும் பதுளைநோக்கி செல்வதற்காக வவுனியா பேருந்துநிலையத்தில் காத்திருந்தபோதே கைதுசெய்யபட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.