வவுனியாவில் போரின்வடு சுமந்த மாற்றுத்திறனாளி மாணவி படைத்த சாதனை!!

893

மாற்றுத்திறனாளி மாணவி படைத்த சாதனை

வன்னி இறுதிப்போரின் போது எறிகணை வீச்சினால் தனது வலது காலை முழுமையாக இழந்த வவுனியா கிழவிக்குளம், பாலமோட்டைச் சேர்ந்த செல்வி ச.பிரியங்கா 2018 ம் ஆண்டு நடைபெற்று அண்மையில் வெளியான க.பொ.த.சாதாரண தரப்பரீட்சையில் 6A, B, C என்ற பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்து வலி சுமந்த வன்னி மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

அத்துடன் இவரது தாயார் அதே சம்பவத்தில் இடது கையை முழுமையாக இழந்து போரின் வடுக்களோடும், குடும்ப வறுமையோடும் வாழ்ந்து வருபவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.

மன வலிமையோடு கல்வி கற்று சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றி சாதனை புரிந்து தன் தாய்க்கும் மண்ணுக்குப் பெருமை சேர்த்த செல்வி ச.பிரியங்காவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் வவுனியா நெற் பெருமையடைகின்றது.

-நன்றி பொன்னம்பலம் சிவபாதம்-

இதே போன்று உடல் அவயங்களை இழந்த மாணவி ஒருவர் இலங்கையில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த சித்தி பெற்றுள்ளார். எஹேலியகொட பிரதேசத்தில் இரண்டு கைகள் மற்றும் ஒரு காலினை இழந்த மாணவி அபார சாதனை படைத்துள்ளார்.

அவர் சாதாரண தர பரீட்சையில் ஒன்பது பாடங்களில் 8A, B சித்தியை பெற்று பாடசாலைக்கும் குடும்பத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். எஹெலியகொட தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் ரஷ்மி நிமேஷா குணவர்தன என்ற மாணவி இம்முறை சாதாரண தர பரீட்சையில் சிறந்த சித்தியை பெற்றுள்ளார்.

ஆசிரியர்கள், பெற்றோர்கள், தனது பாடசாலை நண்பர்களின் உதவியுடன் பரீட்சையில் விசேட வெற்றியை பெற்று கொள்ள முடிந்ததாக ரஷ்மி குறிப்பிட்டுள்ளார்.

தன்னிடம் உள்ள ஒரு பாதத்தை மாத்திரம் பயன்படுத்தி அவர் பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளார். அவரது தாய் மற்றும் தந்தை அதே பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர். இரண்டு கைகள் மற்றும் ஒரு காலின்றி வாழும் இந்த மாணவி, இலங்கை மக்களுக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக மாறியுள்ளார்.

மன தைரியத்தை மாத்திரம் கொண்டு இந்த மாணவி சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இவர்களைப் போன்ற மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதுடன் சாதிப்பதற்கு உடற்குறை ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ளனர்.