வவுனியா நோக்கி பயணித்த பேரூந்து விபத்து : 12 பேர் படுகாயம்!!

994

பேரூந்து விபத்து

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் மோதியதில் 12 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ் விபத்து சிலாபம் புத்தளம் வீதி பங்கதெனிய சந்தியில் இந்த விபத்து இன்று அதிகாலை நேர்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பங்கதெனிய சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தனியார் பேருந்து பின்புறமாக மோதுண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. தனியார் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.