விஜய்க்கு புதிய தொண்டர் படை உருவாக்கம்

619


நடிகர் விஜய் அவ்வப் போது சமூக சேவைகளில் இறங்கிவருவது தெரிந்ததே. அந்த வகையில் சமீபத்தில் கூட இரண்டுமுறை இலவச திருமணம் நடத்திவைத்தார்.

ஆனால், அந்த நிகழ்ச்சிகள் நடந்த போது சரியான பாதுகாப்பு இல்லாததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி அந்நிகழ்ச்சியில் இருந்து விஜய்யே வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், தற்போது தலைவா படத்தில் நடித்து வரும் விஜய், அப்படத்தின் ஆடியோ விழாவை யூன் மாதம் 22ம் திகதி காலை நடத்துகிறார்கள்.



அன்று விஜய்யின் 39வது பிறந்த நாள் என்பதால், அன்றைய தினம் மாலையில், மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரி வளாகத்தில் 3900 ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கப் போகிறாராம் விஜய்.

இந்த விழாவுக்கு தேவையான ஏற்பாடுகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்கிறார்களாம். மேலும், இதுவரை விஜய் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்தபோது சரியான பாதுகாப்பு இல்லாமல் இருந்தது.



ஆனால். இனிமேல் நடக்கும் விழாக்களில் அவர் ரசிகர்களே தொண்டர் படை அமைக்கப் போகிறார்களாம்.



விழாக்களில் எப்படி எப்படி பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பது பற்றிய பயிற்சிகள் அவர்களுக்கு முறையாக வழங்கப்பட்டு வருகிறதாம்.