வவுனியாவில் வயல் விழாவும் கண்காட்சியும்

589


vayal

வவுனியா மாவட்ட விவசாயத் திணைக்களத்தினுடைய விரிவாக்கல் பிரிவின் ஏற்பாட்டில் வயல் விழாவும் கண்காட்சியும் கனகராயன்குளத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.



ஒருங்கிணைந்த பீடை முகாமைத்துவம், இயற்கை பசளைகளை பயன்படுத்தி பயிர்ச்செய்கை மேற்கொள்வதால் ஏற்படும் பீடை தாக்கக் குறைவு, பயிராக்கல் முறையினூடாக நோய்த்தாக்கத்திலிருந்து பாதுகாத்தல், தூவல் நீர்ப்பாசனத்தினூடாக நோய்த்தாக்கத்தை குறைத்தல் என்பவற்றை முன்வைத்து கண்காட்சி நடைபெற்றது.

பயிர்களை பயிரிடும் முறை, குறைந்த செலவில் அதிக இலாபம் பெறும் வகையில் தாவரங்களை நாட்டும்; முறை, வாழை இலையினால் வேலி அடைக்கும் முறை, கோழி வளர்ப்பு, பன்றி வளர்ப்பு ஆகியன தொடர்பில் இதன்போது விளக்கமளிக்கப்பட்டன.



கனகராயன்குளத்திலுள்ள கருமூல தாய் தாவர பழத்தோட்டத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.சிவகுமார், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சரஸ்வதி மோகநாதன், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.