மாணவர்களின் வெற்றிக்கு வழிகாட்டிய வவுனியா ஆசிரியர்கள் கௌரவிப்பு..!

755

கடந்த கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையில் வன்னி பெரு நிலப்பரப்பில் வவுனியா சைவ பிரகாச கல்லூரி முதலாம் இடத்தை பெற்றிருந்தது.

முதலாம் இடத்தை பெறுவதற்கு உறுதுணையாக நின்ற ஆசிரியர்களை கௌரவிக்கும் முகமாக பாடசாலை அதிபரான செல்வி உமா இராசையா அவர்களின் ஏற்பாட்டில் மதியபோசன நிகழ்வு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் வவுனியா தெற்கு வலய பிரதி கல்வி பணிப்பாளர் செல்வி அன்னமலர் முத்துசாமி, வவுனியா நகரகோட்டகல்வி பணிப்பாளர் திரு M.P நடராஜா, நகர கிராம சேவையாளர் திரு .வீ.ஜெகசோதினாதன், மற்றும் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், கணித பாட செயற், திட்டபொறுப்பாசிரியர், ஏனைய பாட ஆசிரியர்கள் பிரதி அதிபர்களும் கலந்து கொண்டனர்.

 

36186865