வவுனியா வர்த்தக சங்கத்தால் பொது வைத்தியசாலைக்கு வெப்பத்தினை அளவிடும் கருவிகள் அன்பளிப்பு!!

894

வெப்பத்தினை அளவிடும் கருவிகள்

வவுனியா வர்த்தக சங்கத்தினால் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மனிதனின் வெப்பத்தினை அளவிடும் கருவிகள் இன்று (02.04.2020) மாலை அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

வைத்தியர் பிரசன்னாவின் வேண்டுகோளுக்கிணங்க வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வவுனியா வர்த்தக சங்கத்தின் நிதியுதவில் மனிதனின் வெப்பத்தினை அளவீட்டு கொரோனா தொற்று உள்ளதா என்பதினை காண்காணிக்கும் கருவிகள் இரண்டு வழங்கி வைக்கப்பட்டது.

இரு கருவிகளையும் வவுனியா வர்த்தக சங்க தலைவர் சுஜன் சண்முகராஜா, செயலாளர் ஆறுமுகம் அம்பிகைபாலன், உறுப்பினர்கள் இணைந்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமாரிடம் கையளித்தனர்.

நாளை தொடக்கம் வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு வருகை தரும் அனைவரும் குறித்த கருவியின் பரிசோதனையின் பின்னரே வைத்தியசாலைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக கொரோனா தொற்று நோயாளிகளை இலகுவாக இனம்கான முடிவதுடன் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் கொரோனா தொற்று பரவுவதையும் தடுக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.