வவுனியாவில் மின்னல் தாக்கியதில் மரத்தில் கீழ் இருந்தவர் மரணம்!!

833

வவுனியாவில்..

வவுனியா நாகர் இலுப்பைக்குளம் பகுதியில் இன்று (08.04.2020) மாலை 5 மணியளவில் மின்னல் தாக்கம் காரணமாக ஒரு பிள்ளையின் தந்தையான 25வயதுடைய இளைஞனொருவர் சம்பவ இடத்திலிலேயே பலியாகியுள்ளார்.

வவுனியாவில் மாலை நேரத்தில் பெய்த மழை காரணமாக வீதியில் ஓரத்தில் நின்ற தென்னை மரத்தில் குறித்த இளைஞன் நின்றுள்ளார். இதன் போது மரத்தின் மீது வீழ்ந்த மின்னல் காரணமாக இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பின்னர் அன்புலன்ஸ் சேவை மூலம் இளைஞனின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இச் சம்பவத்தில் இராசேந்திரகுளம் பகுதியினை சேர்ந்த ஒர் பிள்ளையின் தந்தையான 25 வயதுடைய பெரியசாமி மங்களேஸ்வரன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.