மன்னாரில் விபத்தில் உயிரிழந்த சகோதரிகள் இருவரின் உடல் நல்லடக்கம்!!

745

உடல் நல்லடக்கம்..

மன்னாரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த சகோதரிகள் இருவரினதும் உடல் நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, பரப்பாங்கண்டன் பகுதியில் நேற்று முன்தினம் மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சகோதரிகளான இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மன்னாரில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிளும், மன்னார் நோக்கி வந்த கெப் ரக வாகனமும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த இரு பெண்களும் உயிரிழந்தனர்.

40 வயதான சந்தியோகு லிண்டா மற்றும் 25 வயதான சந்தியோகு டெரன்சி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தனர்.

குறித்த இருவரும் மன்னாரில் இருந்து கட்டையடம்பன் பகுதியில் உள்ள அவர்களுடைய வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், குறித்த இருவரினதும் சடலங்கள் நேற்று முன்தினம் இரவு உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.