வரிசைகளில் மக்கள்..

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரனா தொற்றையடுத்து வவுனியா உட்பட நாட்டின் பல பாகங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் இன்றையதினம் (17.04.2020) வங்களிகளில் தன்னியக்க இயந்திரங்களில் பணம் மீளப்பெறல் , வைப்பிடல் போன்ற செயற்பாடுகளுக்காக மக்கள் வரிசையில் நின்றனர்.

வவுனியா உள்ளிட்ட வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் தவிர்ந்த பகுதிகளில் ஊரடங்கு சட்டம் நேற்று (16.04.2020) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு பிற்பகல் 4.00 மணிக்கு மீண்டும் அமுலுக்கு வந்து மீண்டும் 20ம் திகதி காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

தற்போது ஊரடங்கு நேரத்திலும் வங்கிகளில் தன்னியக்க இயந்திரங்களில் பணம் மீளப்பெறல் , வைப்பிடல் போன்ற செயற்பாடுகளுக்காக ஊரடங்கு அனுமதி பெற்றவர்கள், மொத்த வியாபாரிகள், அரச உத்தியோகத்தர்கள் என பலரும் வங்கிகளில் வரிசையில் காத்திருந்தமையினை காணக்கூடியதாகவிருந்தது.





