வவுனியாவில் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை : சிக்கிய வர்த்தகர்!!

1216

சிக்கிய வர்த்தகர்..

வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் இன்று (20.04.2020) காலை தொடக்கம் மதியம் வரை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் அதிரடியாக செயற்பட்டு அதிக விலைக்கு எண்ணையினை விற்பனை செய்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தனர்.

வர்த்தக நிலையங்களை சோதனைக்குட்படுத்தும் நடவடிக்கையில் வவுனியா நகரில் வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் ஈடுபட்டிருந்தனர்.

,

பஜார் (பொலிஸ் நிலையத்திற்கு பின்பக்கம்) பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் எண்ணை கலனில் ஒட்டப்பட்டிருந்த விலையினை நீங்கி அதிக விலைக்கு எண்ணையினை விற்பனை செய்த வர்த்தகருக்கு எதிராக இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதில் ஒர் வர்த்தகர் எண்ணை கலனில் ஒட்டப்பட்டிருந்த விலையினை வெட்டி நீக்கி இவ்வாறு மக்களுக்கு அதிகளவான விலையில் விற்பனை செய்தமை குறிப்பிடத்தக்கது.