வவுனியாவில் அனைத்து சிகையலங்கார மற்றும் பெண்கள் அழகு கலை நிலையங்களையும் பூட்டுமாறு பணிப்பு!!

882

சிகையலங்கார நிலையங்கள்..

வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து சிகையலங்கார நிலையங்கள் மற்றும் பெண்கள் அழகு நிலையங்கள் என்பவற்றை மறு அறிவித்தல் வரை பூட்டுமாறு சுகாதார பரிசோதகர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கொரனா தொற்று பரவும் அபாயம் உள்ளதால் அதனைக் கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்கும் நோக்கில் அனைத்து சிகையலங்கரிப்பு நிலையங்கள் மற்றும் பெண்கள் அழகு நிலையங்கள் என்பவற்றை பூட்டுமாறு சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு அமைவாக சுகாதார பரிசோதகர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாளை முதல் அனைத்து அழகக நிலையங்களும் பூட்டப்படும் என வவுனியா அழகக கூட்டுறவுச் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.