வவுனியாவில் கசிப்புடன் ஒருவர் கைது!!

661

ஒருவர் கைது..

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் கசிப்பு காய்ச்சும் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் விசேட போ தை ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய ஈச்சங்குளம் காட்டுப்பகுதியை முற்றுகையிட்ட பொலிஸார் 35லீற்றர் கசிப்பினை கைப்பற்றியுள்ளதுடன், அதனை உற்பத்தி செய்வதற்கு பயன்படும் 405000 மி.லீற்றல் கோடா மற்றும் பெரல்களையும் கைப்பற்றியுள்ளனர்.

அதனை காச்சும் நடவடிக்கையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வவுனியா சுந்தரபுரம் பகுதியை சேர்ந்தநபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
கைது செய்யபட்டவர் இன்றய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.