வவுனியாவில் கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்கும் சுகாதார, பாதுகாப்பு துறையினருக்கு நன்றி தெரிவித்து பதாதைகள்!!

697

நன்றி தெரிவித்து பதாதைகள்..

கொரோனா (கோவிட் -19) இலிருந்து எமது தாய்நாட்டு உயிர்களை பாதுகாப்பதற்காக தன்னலமற்ற சேவையினை வழங்கும் சுகாதாரத் துறையினர், முப்படையினர், காவல்துறையினர் மற்றும் ஏனைய துணைப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளிலும் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நன்றி தெரிவிக்கும் பதாதைகள் வவுனியா புதிய பேருந்து நிலையம், மணிக்கூட்டுச்சந்தி, வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இப்பதாதைகளுக்கு வவுனியா பத்தினியார் மகிழங்குளம் ஓயார் சின்னக்குளம் பகுதி கிராம மக்கள், மகிந்தோதய தொண்டர் படையணி கொரோனா நலன்புரி விழிப்புணர்வு பிரச்சாரக் குழுவினர் உரிமை கோரியுள்ளனர்.