வவுனியாவில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட அரிசி மூடைகள் : திருப்பி அனுப்பிய இராணுவம்!!

726

அரிசி மூடைகள்..

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரின் உத்தரவை மீறி வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி கொண்டு செல்லப்பட்ட அரிசி மூடைகளை இராணுவத்தினர் திருப்பி அனுப்பிய சம்பவம் ஒன்று நேற்று (24.04.2020) இரவு இடம்பெற்றுள்ளது.

வவுனியா, இறம்பைக்குளம் பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றுக்கு சொந்தமான அரிசி மூடைகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு நோக்கி சென்ற பாரவூர்த்தியை புத்தளம் சாளியவேவ பகுதியில் வைத்து சோதனை செய்த இராணுவத்தினர் முறையான அனுமதி பெறப்படாது அரிசி கொண்டு செல்லப்படுவதாக தெரிவித்து அப் பாரவூர்தியை வவுனியாவிற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் இருந்து இரண்டு வாரங்களுக்கு வெளி மாவட்டங்களுக்கு அரிசி கொண்டு செல்வதற்கு அரச அதிபரால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.