வவுனியா சிறைச்சாலை உத்தியோகத்தருக்கு கொரோனா தொற்று இல்லை : வைத்திய அறிக்கை!!

741

கொரோனா..

வவுனியா வைத்தியசாலையில் கொரோனா சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்ட சிறைச்சாலை உத்தியோகத்தருக்கு கொரோனா தொற்று இல்லை என மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

காய்ச்சல் காரணமாக நேற்று மாலை வவுனியா சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். குறித்த நபரை தனிமைப்படுத்தி கொரோனா தொற்று உள்ளதா என்பதை பரிசோதிப்பதற்காக அவருடைய இரத்த மாதிரிகள் பெறப்பட்டு அனுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

குறித்த பரிசோதனையில் சிறைச்சாலை உத்தியோகத்தருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.