வவுனியா கனகராயன்குளத்தில் மழையுடன் கூடிய காற்றினால் 16 வீடுகள் பாதிப்பு!!

663

கனகராயன்குளத்தில்..

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் மழையுடன் கூடிய கடும் காற்றுக் காரணமாக 16 வீடுகள் பாதிப்படைந்துள்ளன. அவற்றுக்கு இழப்பீடு வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.

மாவட்ட அனர்த்த நிலைமை தொடர்பில் கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,

நேற்று முன்தினம் (25.04) மாலை பெய்த மழையின் போது வீசிய கடும் காற்றினால் வவுனியா வடக்கு பிரதேச செலக பிரிவுக்குட்பட்ட கனகராயன்குளம் பகுதியில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 66 பேர் பாதிப்படைந்திருந்தனர். அவர்களுடைய 16 வீடுகளின் கூரைகள் காற்றினால் தூக்கி வீசப்பட்டு பகுதியளவில் சேதமடைந்திருந்தன.

குறித்த 16 வீடுகளையும் நேற்று (26.04) பார்வையிட்ட மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினர் அவர்களுக்குரிய இழப்பீடுகளை உடனடியாக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்மாக 10 ஆயிரம் ரூபாயும் அதன் பின் மதீப்பீட்டின் படி இழப்பீடும் வழங்கப்படும் எனத் தெரிவித்தனர்.