வவுனியாவில் ஊரடங்கிலும் மருந்தகங்கள் திறப்பு!!

597

மருந்தகங்கள் திறப்பு..

நாட்டில் கொரனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில் வவுனியாவில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள சமயத்தில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மருந்தகங்கள் திறந்துள்ளன.

ஊடரங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் நோயாளர்களின் நலனை கருத்தில் கொண்டு மருந்தகங்களும் திறக்கப்பட்டுள்ளது.

நாளையதினம் வவுனியா உட்பட நாட்டின் பல பாகங்களில் ஊடரங்கு சட்டம் நாளை காலை 5.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரையிலான காலப்பகுதியில் தளர்த்தப்படவுள்ள நிலையில் மக்கள் சமூக இடைவெளியினை பேணும் வகையில் வீதிகளில் நிறப்பூச்சினால் சதுர வடிவில் அடையாளமிடப்பட்டுள்ளது.