வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!!

1275

முக்கிய அறிவித்தல்..

நாட்டில் கொரனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து நீதிமன்றத்திற்கு வருகை தருபவர்களுக்கு வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்ற பதிவாளர் முக்கிய அறிவித்தல் விடுத்துள்ளார்.
வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்ற பதிவாளர் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அழைக்கப்படும் வழக்குகள் (Calling Cases) காலை 9.00 மணி தொடக்கம் 12.30 மணிவரையும் விளக்க வழக்குகள் (Trial Cases) நண்பகல் 1.00 மணி தொடக்கம் 3.00 மணிவரையும் இடம்பெறும் எனவும் அத்துடன் நீதிமன்றத்திற்கு வரும் சகலரும் முகக்கவசம் அணிந்து வரவேண்டும்,

நீதிமன்றத்திற்கு வருகின்ற அனைவரும் தங்களது கைகளை நன்றாக கழுவிய பின்னர் (உரிய ஏற்பாடுகள் நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது) நீதிமன்ற உத்தியோகத்தரின் அல்லது பொலிஸ் உத்தியோகத்தரின் அறிவுறுத்தலை பின்பற்றி ஒதுக்கப்பட்ட இடங்களில் உரிய இடைவெளிவிட்டு நிற்க வேண்டும்.

மேலும் திறந்த நீதிமன்றத்தில் ஒரு தடவையில் 10 வழக்குகளுடன் தொடர்புடைய நபர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவர், அழைக்கப்படுகின்ற 10 வழக்குடன் தொடர்புடைய நபர்கள் மாத்திரம் உரிய இடைவெளியினை பேணி திறந்த நீதிமன்றத்திற்குள் சென்று அமைக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறைகளை பேணி நடக்க வேண்டும்.

அத்துடன் நீங்கள் நடவடிக்கை முடிவடைந்த பின்னர் எக்காரணம் கொண்டும் தாமதிக்காது நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேற வேண்டும். பொதுமக்கள் யாரும் சிற்றுண்டிச்சாலைக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் .

2020ம் ஆண்டு சித்திரை மாதம் 21ம் திகதி நீதிமன்ற கட்டளைப்படி இவ் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்ற பதிவாளரின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.