வவுனியாவில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை!!

731

முகக்கவசம்..

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரனா தொற்றையடுத்து அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் வவுனியா மாவட்டத்தில் இன்று (28.04.2020) காலை 5.00 மணி தொடக்கம் இரவு 8.00மணி வரை 15 மணிநேரம் தளர்த்தப்பட்ட நிலையிலும் வீதியோரங்களில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை காண்காணிக்கும் நடவடிக்கையில் இன்று காலை பொது சுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டிருந்தனர்.

கொரனா தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில் பொது சுகாதார பரிசோதகர்கள் வீதியோரங்களில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வருபவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிந்து இருப்பதுடன் மரக்கறிகள் சுகாதார முறையில் விற்பனை செய்யப்படுகின்றதா என்பவற்றினை காண்காணித்தனர்.

இதன் போது முகக்கவசம் அணியாது வியாபார நடவடிக்கையில் ஈடுபடுபவர்களின் விபரங்கள் திரட்டப்பட்டதுடன் அவர்களுக்கு வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதற்கும் தடை செய்தனர்.