30 வீடுகள்..

வெலிசறை இராணுவ முகாமில் இருந்து விடுமுறையில் வவுனியாவிற்கு வருகை தந்த கடற்படை சிப்பாய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து வவுனியாவில் மேலும் 30 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டன.

வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றி விடுமுறையில் வவுனியா, மகாகச்சகொடி பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு வருகை தந்த கடற்படை வீரருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து குறித்த கடற்படை வீரர் சென்ற இடங்கள் சுகாதார துறையினரால் வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த நபர் சென்ற வர்த்தக நிலையங்கள், வாகன திருத்துமிடங்கள், தனியார் நிறுவனங்கள் என்பவற்றில் சம்பவ தினம் கடமையாற்றியவர்களை தனிமைப்படுத்தும் செயற்பாட்டை சுகாதார பரிசோதகர்களும், பொலிசாரும் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

இதற்கமைவாக இன்றும் வவுனியா நகரையண்டிய பகுதிகள் உட்பட்ட 30 பேரினது வீடுகள் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டன.





