யூலை 5ம் திகதி வெளிவரும் சிங்கம் 2..!

595

கொலிவுட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் சிங்கம் 2.
பரபர விறுவிறு காட்சிகளில் கவனம் ஈர்ப்பவர் அருவா இயக்குநர் ஹரி. சிங்கம் கதையின் தொடர்ச்சியை சிங்கம் 2வில் தொடர்ந்தாலும், சூர்யாவுக்கு இது ரொம்பவே முக்கியமான படமாக இருக்கும்.

சிங்கம் படத்தில் உள்ளூர் அரசியல்வாதிகளைப் புரட்டி எடுத்த சூர்யா, சிங்கம் 2வில் தூத்துக்குடியில் உலாவும் கடத்தல்காரர்களையும், பெரிய பெரிய டான்களையும் துவாம்சம் பண்ணுகிறாராம்.

பள்ளிக்கூட மாணவியாக நடிக்கும் ஹன்சிகா தான் சர்வதேசக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க சூர்யாவுக்கு உதவி செய்கிறாராம்.

இதைத் தெரிந்து கொண்ட பெரிய டான் ரகுமான், அண்ணன் மகள் என்று கூட பார்க்காமல் ஹன்சிகாவைக் கொன்று விடுகிறார்.

ஹன்சிகா இறந்த பின்பு சூர்யா வெறித்தனமாக வேட்டையாடி ரகுமான் நெட்வொர்க்கைக் கண்டுபிடித்து எல்லா டான்களின் சதிச் செயல்களையும் முறியடிப்பதே சிங்கம் 2வின் கதையாம்.

சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சிங்கம் 2’ படம் யூலை 5ம் திகதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.

தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திராவிலும் இப்படம் வெளியாகிறது. ஆந்திராவில் யமுடு 2 என்ற பெய‌ரில் வெளியிட இருக்கின்றனர்.