வவுனியாவில் 20 லீற்றர் கசிப்பு மீட்பு : 29 வயது இளைஞன் கைது!!

951


இளைஞன் கைது..



வவுனியா, சாந்தசோலைப் பகுதியில் 20 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய போ தை ஒழிப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.



இன்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிராந்திய போ தை ஒழிப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் தம்மிக்க பிரியந்த அவர்களின் வழிகாட்டலில்,




பிராந்திய போ தை ஒழிப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.பி.சுபசிங்க தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட்களான ஜயந்த (35885), நிமால் (60064), பொலிஸ் கொன்ஸ்டபிள்களான பிரசன்ன (82663), லலித் (85061),


சசிதரன் (37763), பிரசாந் (91000) மற்றும் பொலிஸ் சாரதியான சார்ஜன் பந்துல (34251) ஆகியோர் அடங்கிய குழுவினர் சாந்தசோலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது வீடு ஒன்றில் இருந்து 20 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு, ஒரு பெரல்,

வடி வளையம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் 29 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.